Showing posts with label SUPER. Show all posts
Showing posts with label SUPER. Show all posts

Monday, February 21, 2011

"ஆதியும்... பாதியும்..."

"ஆதியும்... பாதியும்..."



உடலமாய் உழல்கிறேன் சடலமாய் திரிகிறேன்
நானாகிப்போன ஆவி சூடாகிப் போக
வாழும் வழியறியேன் சூழும் விதியறியேன்
பாழும் வினைப் படுத்தும் நிலையறியேன்.

சூளது சூழாது தாழாது வீழாது
மோகத்து மோகிக்கும் தேகத்துப் புகாது
விதியும் விதிர்க்க விக்கித்துப் போக
சத்தும் வித்தும் சாகா ரசமாகாது




சுழுமுனை சுழல கழலும் தழல்
எரிதழல் எரிக்கும் தேகம் செரிக்கும்
கறிநிழல் காக்கும் கரும வினை



வைத்தப் பொறியுள் தைத்த புதையல்
வையத்துள் பொதியும் பதியம் படையல்
விதியின் பசிக்கும் வினையின் ருசிக்கும்
வடியும் உதிரம் வாழ்க்கைப் புசிக்கும்




சதி செய்த விதி தனை
மதி கொய்த சூது தனை
பதி பாசம் பற்றறுத்து வினை
முற்றும் மீள்வேன் எனை மீட்பேன்